செய்திகள்

மதுரையில் திருமணமான 5 நாளில் அர்ச்சகர் தற்கொலை

Published On 2017-12-04 09:20 GMT   |   Update On 2017-12-04 09:20 GMT
மதுரையில் திருமணமான 5 நாளில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

மதுரை:

மதுரை மேலவாசல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலனியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30) கோவில் அர்சசகர்.

இவருக்கு, கடந்த 29-ந் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு புது மனைவியுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்றார். நேற்று புதுமணத் தம்பதிகளுக்கு அண்ணன் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளில் குடும்பத்தினர் மாலையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் ஆனந்தை மட்டும் காணவில்லை.

அவரை உறவினர்கள் தேடியபோது வீட்டின் ஒரு அறையில் தூக்கில் தொங்குவது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஆனந்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News