செய்திகள்

லாஸ்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2017-11-30 10:08 GMT   |   Update On 2017-11-30 10:08 GMT
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை கவிக் குயில் நகரை சேர்ந்தவர் கணேஷ்பாபு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சவிதா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கணேஷ் பாபுவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்.

சம்பவத்தன்றும் இது போல் குடித்து விட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தகராறு அதிகமாகவே எங்களை யார் காப்பாற்றுவார்கள்? என்று மனைவி திட்டினார்.

இதில் விரக்தி அடைந்த கணேஷ்பாபு இரவு 10 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பிறகு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்டு மனைவி எழுந்து பார்த்தார். கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் வந்து அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து கோரிமேடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News