செய்திகள்

தேனி அருகே 2 ஆட்டோக்களை திருடிச்சென்ற கும்பல்: போலீசார் விசாரணை

Published On 2017-11-25 16:59 GMT   |   Update On 2017-11-25 16:59 GMT
தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 ஆட்டோக்களை திருடிய நபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தேனி:

தேனி அருகே கொடுவிலார்பட்டி பள்ளபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது28). இவர் தேனியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோ திருடு போயிருந்தது.

இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அரப்படிதேவன்பட்டியை சேர்ந்த நல்லமுத்துகாமன், கொடுவிலார்பட்யை சேர்ந்த ராஜ்குமார், சமதர்மபுரம் கபின் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகீம்(வயது30). இரவு வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோ காணாததால் அதிர்ச்சி அடைந்த சையதுஇப்ராகீம் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து ஒண்டிவீரன் நகர்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News