search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ திருட்டு"

    • திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு டீ கடைக்குச் சென்றுள்ளார்.
    • ராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ராயபுரம்:

    திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்தவர் ராஜா (வயது 30) ஆட்டோ டிரைவர். கடந்த 7-ந் தேதி அன்று புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு டீ கடைக்குச் சென்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் சாவியுடன் இருந்த ஆட்டோவை திருடிக் கொண்டு தப்பித்து சென்றார். இது பற்றி ராஜா புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு தேடி வந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜா (27) என்பவர் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது.

    பின்னர் ராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டு வாசலில் நிறுத்திய ஆட்டோ திருட்டுபோனது
    • வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றவர்

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் பழ நந்தவனம் ஸ்ரீனிவாச நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர் தன்னுடைய ஆட்டோவை கடந்த 6-ந் தேதி வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றவர் மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த ஆட்டோ திருடப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×