செய்திகள்

டி.கல்லுப்பட்டி அருகே பெண்கள் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து: 6 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2017-11-23 14:46 GMT   |   Update On 2017-11-23 14:46 GMT
முன் விரோத தகராறில் பெண்கள் உள்பட 4 பேருக்கு கத்திகுத்து விழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவரது உறவுப்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த முருகசெல்வம் மகன் வீரவேல் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் முருகனுக்கும், முருகசெல்வத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்றும் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதில் முருகன், அவரது தாய் மாரியம்மாள், மனைவி பஞ்சவர்ணம், உறவினர் முருகம்மாள் ஆகிய 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகசெல்வம், அவரது மகன்கள் வீரக்குமார், பாலுசாமி, உறவினர்கள் முத்துலெட்சுமி, சித்ரா, முனீஸ்வரி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News