செய்திகள்

நாசரேத் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2017-11-20 14:37 GMT   |   Update On 2017-11-20 14:38 GMT
நாசரேத் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரையை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 62). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பைக்கில் ஒய்யான்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலையோர கிணற்று சுவற்றில் பைக் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News