செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2017-11-19 16:56 GMT   |   Update On 2017-11-19 16:56 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 1280 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 1600 கன அடியாக இருந்தது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 1280 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 1600 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போல மேட்டூர் அணை கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் அணைக்கு நீர் வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

நேற்று 82.98 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 82.44 கன அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News