செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:
வங்கக்கடலில் உருவான குறைந்த அழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி தமிழக கடல் பகுதியை விட்டு விலகிச் சென்றுவிட்டது. அது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலவீனம் அடையும் நிலையில் உள்ளது.
இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். இந்த தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காவேரிபாக்கத்தில் 4 செ.மீ. மழை பெய்து உள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த அழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி தமிழக கடல் பகுதியை விட்டு விலகிச் சென்றுவிட்டது. அது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலவீனம் அடையும் நிலையில் உள்ளது.
இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். இந்த தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காவேரிபாக்கத்தில் 4 செ.மீ. மழை பெய்து உள்ளது.