செய்திகள்

தேனி அருகே தாய் வீட்டிற்கு வந்த புதுப்பெண் மாயம்

Published On 2017-11-16 11:43 GMT   |   Update On 2017-11-16 11:43 GMT
தேனி அருகே மாயமான புதுப்பெண்ணை குறித்து வழக்கு பதிவு செய்து பழனி செட்டிபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

தேனி அருகே பூதிப்புரம் சின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் முனியாண்டி மகள் முனியம்மாள்(வயது18). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த செண்பகதிருக்குமார் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தலை தீபாவளிக்காக மணமக்கள் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். முனியம்மாள் மட்டும் தாய் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு சென்றுவருவதாக கூறிச்சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த தந்தை உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் முனியம்மாள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசில் முனியாண்டி அளித்த புகாரில் உறவினர் அழகர் என்பவர் தனது மகளை கடத்தியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து முனியம்மாளை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகே கே.கே.பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ரேவதி(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் தாய் வீட்டில் தங்கியிருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைக்காக சென்று வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரேவதி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் அவரது தாய் சாந்தி புகார் அளித்தார்.

அதில் ஜீப் டிரைவர் கேரளா புலியமலையை சேர்ந்த சரவணன் என்பவர் தனது மகளை கடத்தியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ரேவதியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News