செய்திகள்

விழுப்புரம் அருகே பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 28 பேர் காயம்

Published On 2017-11-10 21:20 GMT   |   Update On 2017-11-10 21:20 GMT
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் புறவழிச்சாலையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 28 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே இருவேறு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 28 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் புறவழிச்சாலையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 28 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News