செய்திகள்
சோழவந்தான் வைகை ஆற்றில் மணல் எடுத்த 2 பேர் கைது
வைகையாற்றில் திருட்டுத்தனமாக மணல் எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோழவந்தான்:
சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அவர்கள் வைகை ஆற்றுப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மணல் திருடி வருவது விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மணல் மூட்டை மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்களது பெயர் அக்னி (வயது 42) கருப்பையா (40) என்பதும் பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.