search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "river sand robbery"

    ஆற்று மணலை கொள்ளையடிக்க அ.தி.மு.க.வினர் காடுகளை அழித்து வருகிறார்கள் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். #AnbumaniRamadoss #ADMK

    ஆண்டிப்பட்டி:

    வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற பிரசார இயக்கத்தை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார்.

    ஆறுகள் வறண்டால்தான் மணல் பரப்பில் கொள்ளையடிக்க முடியும் என்பதால் மழை பெய்யாமல் இருக்க அ.தி.மு.க.வினர் காடுகளை அழித்து வருகிறார்கள். இதன் காரணமாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாமல் ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. வைகை அணையை நம்பியுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் விளை நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    தமிழகத்தின் 4-வது பெரிய ஆறான வைகை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்ளுக்கு உயிரோட்டமாகவும் உள்ளது.

    கடந்த காலத்தை எடுத்து பார்த்தால் வைகையில் ஆண்டுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வராமல் இருக்கும். ஆனால் தற்போது ஆண்டுக்கு ஒரு மாதத்தில் மட்டும்தான் தண்ணீரே வருகிறது.

    எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள 20 நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் ஓடும் 36 ஆறுகளை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #AnbumaniRamadoss #ADMK

    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள செம்பியக்குடி பகுதியில் வெங்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவதன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, செம்பியகுடி சுடுகாட்டு பாதையில் லாரிகளில் பொக்லைன் கொண்டு மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், மணல் அள்ள பயன்படுத்தி பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும், லாரிகளின் டிரைவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கவுபாளையம் குமார்(30), கோனேரி பானையம் சின்னதம்பி(22) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பொக்லைன் டிரைவரை தேடி வருகின்றனர். இது போன்று தினமும் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி சாலையில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியே க.மேட்டுத் தெரு பிரிவு பாதை அருகே வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்த போதுஅந்த லோடு ஆட்டோவில் அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவை ஓட்டி வந்த வைத்திய நாதபுரம் மணிகண்டன்(30) என்பவரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    ×