செய்திகள்

திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம்: தந்தை கைது

Published On 2017-10-14 10:34 GMT   |   Update On 2017-10-14 10:34 GMT
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே வேலையாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய 16 வயது மகள், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில், திருமண வயதை எட்டாத அந்த சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (27) என்ற வாலிபருக்கு கடந்த மாதம் 4-ந் தேதி பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து, சமூக நலத் துறை விரிவு அலுவலர் தனலட்சுமி விசாரணை நடத்தி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தை தேவேந்திரனை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியை திருமணம் செய்த தமிழரசன், சிறுமியின் தாய் அஞ்சலை, உறவினர்கள் பரசுராமன், ஏழுமலை, பாண்டு ஆகியோரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News