செய்திகள்

வில்லியனூர் அருகே கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

Published On 2017-10-07 10:33 GMT   |   Update On 2017-10-07 10:33 GMT
வில்லியனூர் அருகே கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே உருவையாறு கிராமம் குடுவையாறு பகுதியில் நேற்று அதிகாலை 3 வாலிபர்கள் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

ஆனால், போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆசிப் அலி (வயது 22), அதே பகுதியை சேர்ந்த புஷ்பலிங்கம் (38) மற்றும் திருக்காஞ்சியை சேர்ந்த ராஜா (31) என்பதும், இவர்கள் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News