செய்திகள்

வாட்ஸ்-அப்பில் வீடியோ பார்த்த மாணவர் இடிதாக்கி பலி

Published On 2017-10-04 08:34 GMT   |   Update On 2017-10-04 08:34 GMT
செங்குன்றம் அருகே வாட்ஸ்-அப்பில் ‘வீடியோ’ பார்த்த மாணவர் இடிதாக்கி சாவு சார்ஜரில் போட்டு பயன்படுத்தியதால் கதிர்வீச்சு தாக்கியது

செங்குன்றத்தை அடுத்த நல்லூர், நாகாத்தம்மன் நகர் கருணாநிதி தெருவில் வசித்து வருபவர் சித்திரை வேல்.

இவரது மகன் ரஞ்சித் (வயது 21). திருப்பாச்சூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருந்தார்.

நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த ரஞ்சித் தனது செல்போனை சார்ஜரில் போட்டபடி வாட்ஸ்-அப்பில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இடி தாக்கியதால் ஏற்பட்ட கதிர்வீச்சு ரஞ்சித் மீது பாய்ந்தது. இதில் அலறியபடி அவர் மயங்கி விழுந்தார்.

சத்தம் கேட்டு வந்த பெற்றோர், மகன் ரஞ்சித் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு செங்குன்றம் எம்.ஏ.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கதிர்வீச்சு தாக்கி ஏற்கனவே ரஞ்சித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் அலறி துடித்தனர்.

ரஞ்சித்தின் உடலை போலீ சார் மீட்டு பிரேத பரிசோத னைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சோழ வரம் இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News