செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் மதுபானம் விற்ற வாலிபர் கைது

Published On 2017-09-26 09:45 GMT   |   Update On 2017-09-26 09:45 GMT
திருக்காட்டுப்பள்ளியில் மதுபானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை கைது செய்து அவர் வைத்திருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் மதுபானம் விற்றவர் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்று தெரியவந்தது.

Tags:    

Similar News