செய்திகள்
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த விவசாயி திடீரென நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து இறந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). விவசாயி. இவர், கடந்த 12-ந்தேதி மருவத்தூர்-கொட்டரை குரும்பா பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று துரைராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). விவசாயி. இவர், கடந்த 12-ந்தேதி மருவத்தூர்-கொட்டரை குரும்பா பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று துரைராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.