செய்திகள்

திருமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2017-09-17 11:46 GMT   |   Update On 2017-09-17 11:46 GMT
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பெண்ணை கீழே தள்ளி 6 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி மகேசுவரி. நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென் றார்.

அங்கு உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்றுவிட்டு மகேசுவரி வீட்டுக்கு புறப்பட்டார். திருமங்கலம்-சோழவந் தான் சாலையில் அவர் சென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் மகேசுவரி வாகனத்தை இடித்து கீழே தள்ளினர்.

இந்த சம்பவத்தால் மகேசுவரி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனை பயன்படுத்தி அவரை தாக்கிவிட்டு, மகேசுவரி அணிந்திருந்த 2 தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் மகேசுவரி புகார் செய்தார். அதில் 6 பவுன் நகைகளை மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் பறித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு 10 பவுன் நகை பறிபோனது. இந்த சம்பவங்கள் பெண்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News