செய்திகள்

தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-09-11 10:53 GMT   |   Update On 2017-09-11 10:53 GMT
தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாலையம்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி ஜேசி.பி. ஆப்ரேட்டர். இவருக்கும் செக்காரப் பட்டியை சேர்ந்த சித்ரா (வயது20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பிறகு 2 பேரும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊத்துக்குழியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

சித்ராவுக்கும், பழனிசாமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்து தொப்பூர் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்வம் குறித்து தொப்பூர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News