செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2017-09-11 07:01 GMT   |   Update On 2017-09-11 07:01 GMT
வண்ணாரப்பேட்டையில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயண தெருவில் நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த காசிமேடு, காசிபுரத்தை சேர்ந்த ரவி என்கிற பவுடர் ரவியிடம் விசாரணை செய்த போது கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து ரவியை போலீசார் கைது செய்தனர்.

கைதான ரவி மீது ஏற் கனவே 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கு உள்ளது. குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த அவன் கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் வெளியில் வந்து உள்ளான். ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து வடசென்னை முழுவதும் விற்று வந்ததாக ரவி தெரிவித்து உள்ளான். அவனுடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News