செய்திகள்

முசிறி அருகே வாகனம் மோதி சலவை தொழிலாளி பலி

Published On 2017-09-10 12:06 GMT   |   Update On 2017-09-10 12:06 GMT
முசிறி அருகே வாகனம் மோதி சலவை தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி:

முசிறி கைக்காட்டி அருகே தா.பேட்டை ரோட்டு பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது65). இவர் அந்த பகுதியில் சலவைக் கடை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 2ந்தேதி இரவு கடையில் வேலை முடிந்தபின் டீ சாப்பிடுவதற்காக கைக் காட்டிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் சீனிவாசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி எறியப்பட்ட சீனிவாசனுக்கு தலையில் பலத்த அடிபட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி சீனிவாசனின் மனைவி கிருஷ்ணவேணி(60) முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News