செய்திகள்

அம்மாப்பேட்டை அருகே ரெயில்மோதி எலக்ட்ரீசியன் பலி

Published On 2017-09-09 11:44 GMT   |   Update On 2017-09-09 11:44 GMT
அம்மாப்பேட்டை அருகே ரெயில்மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் தாதம்பட்டி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. தண்டவாளத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் இருந்தது.

அதை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் சேலம் அம்மாப்பேட்டை பட்ட நாயக்கர்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் சசிகுமார் (வயது27) எலக்ட்ரீசியன் என்பது தெரியவந்தது.

இவர் நேற்று இரவு ரெயில்வே தண்டவாளத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவர் செல்போனில் பேசிக் கொண்டு தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றபோது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News