செய்திகள்

மணப்பாறை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: 12 ம் வகுப்பு மாணவன் கைது

Published On 2017-09-06 12:00 GMT   |   Update On 2017-09-06 12:00 GMT
மணப்பாறை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 12 ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டியில் 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 ம் தேதி வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வெளியில்சென்று விட்டனர்.

இந்நிலையில்சிறுமியின் வீட்டின் அருகே என்.பூலாம் பட்டியில் 12 ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் வசித்து வந்தார். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அந்த மாணவர் சிறுமியின் வீட்டிற்குள் சென்று சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் வீட்டிற்குவந்த பெற்றோரிடம் சிறுமி கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் நேற்று காலை மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மகளிர் போலீசார் பள்ளி மாணவனை கைது செய்தனர்.

Tags:    

Similar News