செய்திகள்

பொன்னேரி அருகே விபத்தில் பெண் பலி: ஆம்புலன்சு வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் மறியல்

Published On 2017-09-04 07:57 GMT   |   Update On 2017-09-04 07:58 GMT
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு பேராடியவர்களை மீட்க ஆம்புலன்சு வர தாமதம் ஆனதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த காட்டாலூர் இருளர் காலனியை சேர்ந்தவர் பார்வதி (வயது 55). உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் விஜயகுமார் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னேரிக்கு அரசு ஆஸ்பத்திரிஅழைத்து சென்றார். அவர்களுடன் பார்வதியின் மகளும் சென்றார்.

சின்னக்காவனம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

இதில் பார்வதி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே பார்வதி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் உறவினர் விஜயகுமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதுபற்றி உடனடியாக அப்பகுதி மக்கள் ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சு வர தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொன்னேரி - பழவேற்காடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி. ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News