செய்திகள்

நீட் குறித்து நான் பதில் சொன்னால் பலரது நிலை கீழே இறங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்

Published On 2017-09-03 06:05 GMT   |   Update On 2017-09-03 06:05 GMT
நீட் தேர்வு குறித்து நான் பதில் கூறினால் பலரது நிலை கீழே இறங்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பரம ஏழை குடும்பத்தில் பிறந்து 1176 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதாவின் மரணம் என்னை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியை தர வேண்டும்.

அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் செயலை சொல்லித்தர வேண்டும்.

நீட் தேர்வு குறித்து இந்த நேரத்தில் சில வி‌ஷயங்களை பேசுவது முறையாக இருக்காது. ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பது முறையாக இருக்காது. எந்த அரசியல் கட்சியும் எதை வேண்டுமானாலும் பேசலாம். அதற்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை.

நான் பதில் சொன்னால் பல பேர் கீழே இறங்க வேண்டிய நிலை வரும். மாணவி இழப்பால் மிகப் பெரிய சுமையோடு இருக்கிறோம். சில நாட்களில் அனிதாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பேன்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News