செய்திகள்

உல்லாசமாக இருந்துவிட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த மாணவர் கைது

Published On 2017-09-02 12:04 GMT   |   Update On 2017-09-02 12:04 GMT
விழுப்புரம் அருகே மாணவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:

விழுப்புரம் அருகே உள்ள அதனூரை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் வந்தனா(19). விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே ஆதனூரை சேர்ந்தவர் ரஞ்சித் (19). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரஞ்சித் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தனாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பமானார். இதனால் கடந்த 6 நாட்களுக்கு முன் வந்தனாவுக்கு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் வந்தனாவை திருமணம் செய்ய ரஞ்சித் மறுத்து விட்டார். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News