செய்திகள்

மோடி குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்

Published On 2017-08-29 13:58 GMT   |   Update On 2017-08-29 13:58 GMT
பிரதமர் மோடி குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி கோவையில் பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை:

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை வைத்து பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்தை மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறி, அவர் மீது கோவை சூளூர் காவல் நிலையத்தில் பா.ஜ.க.வினர் இன்று புகாரளித்துள்ளனர்.
Tags:    

Similar News