செய்திகள்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் கூறி உள்ளார்.
சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தென்மேற்கு பருவ மழையானது தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜுன் 1ந் தேதி முதல் ஆகஸ்ட் 17ந் தேதி (இன்று) வரை 21 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 6 வருடங்களில் பெய்த அதிகபட்ச மழையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தென்மேற்கு பருவ மழையானது தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜுன் 1ந் தேதி முதல் ஆகஸ்ட் 17ந் தேதி (இன்று) வரை 21 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 6 வருடங்களில் பெய்த அதிகபட்ச மழையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.