search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meteorological Center"

    • சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும்.
    • துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில் தான், மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "துல்லியமாக கணிக்க இயலாத சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும்" என கூறினார்.

    அன்புமணியின் இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    இந்நிலையில், அன்புணி ராமதாஸ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த விளக்கத்தில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை.

    வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்கவில்லை என்பது எனது ஆதங்கம்.

    வெளிநாடுகளில் உள்ளது போல் ஏன் நமது வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

    இனிவரும் காலங்களில் இன்னும் அதிகம் மழை, புயல், வெள்ளம் வரும். துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில் தான், மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை நாலுமுக்கு பகுதியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.
    • தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் 1½ மாதத்தில் எப்போதும் 283 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 243 மி.மீ. அளவுக்கே மழை பெய்துள்ளது. இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது புயலாக மாறி வங்கதேச கடற்கரை நோக்கி சென்றுவிட்டது.

    இதனால் தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.

    இந்நிலையில் வருகிற 19-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    மறுநாள் 20-ந்தேதி தமிழகம்-புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

    தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். #MeteorologicalCenter #Summer
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சூரிய சந்திர ராவ் தலைமை தாங்கினார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார்.



    நிகழ்ச்சிக்கு பின்னர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் கடந்த 1980-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ” என்றார்.

    உலக வானிலை தினத்தை முன்னிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் காற்றின் வேகத்தை அளக்கும் கருவி உள்ளிட்ட கருவிகள், கஜா புயல் குறித்த வானிலை படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #MeteorologicalCenter #Summer
    தமிழகத்தில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MeteorologicalCenter
    சென்னை:

    வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ‘பெய்ட்டி’ புயல் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் அடுத்த 3 நாட்களுக்கு (20-ந் தேதி வரை) பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகரிலும் இதே நிலை தான் காணப்படும்.

    இதன் பின்னர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. அதன் நகர்வை பொறுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    ‘பெய்ட்டி’ புயல் நேற்று (நேற்று முன்தினம்) தமிழகத்தை கடந்து சென்றபோது வட திசையில் இருந்து நிலப்பகுதி காற்று வீசியதால் குளிர் கடுமையாக இருந்தது. இதனால் பகல்நேர வெப்பநிலை இயல்பை விடவும் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக பகல் நேர வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இது இயல்பை விடவும் 3.6 டிகிரி செல்சியஸ் குறைவு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MeteorologicalCenter

    பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    சென்னை:

    பெய்ட்டி புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி புயல் தீவிரப் புயலாக மாறியது. 26 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

    பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70-90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திரா-புதுச்சேரி மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #heavyrain #MeteorologicalCenter
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2 தினங்களாக மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி வானம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகரை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போதைய நிலவரப்படி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகளோ, புயலுக்கான அறிகுறியோ எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பூதப்பாண்டி, மன்னார்குடியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

    இதையடுத்து அம்பாசமுத்திரத்தில் 4 செ.மீ. மழையும், பாபநாசம், தக்கலை, மேட்டுப்பாளையம், இரணியல், மணிமுத்தாறு, குளச்சலில் தலா 2 செ.மீ. மழையும், நீடாமங்கலம், சாத்தான்குளம், மதுக்கூர், வேடசந்தூர், நிலக்கோட்டை, சேரன்மகாதேவி, ஓட்டப்பிடாரம், திருக்காட்டுப்பள்ளியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.  #heavyrain #MeteorologicalCenter
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Deltadistrict #heavyrain
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கலாம்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 19 செ.மீ., நாகையில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

    தவிர காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கோவை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வரை (நேற்றுடன்) சராசரியாக 33 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 30 செ.மீ. மழையே பெய்துள்ளது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவாகும். சென்னையில் 58 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 32 செ.மீ. மழையே பெய்திருக்கிறது. இது இயல்பை விட 45 சதவீதம் குறைவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Deltadistrict #heavyrain
    வங்கக்கடலில் உருவான புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கிறது. அரபிக்கடலில் உருவான புயல் ‘லூபன்’ ஒமனில் 14-ந் தேதி கரையை கடக்கும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரையிலும், அரபிக்கடலில் 14-ந் தேதி வரையிலும் மீன் பிடிக்க செல்லவேண்டாம்.

    தமிழகத்தில் இந்த இரு புயல் காரணமாக பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சின்னக்கல்லார் 7 செ.மீ., வால்பாறை, மேட்டுப்பாளையம் தலா 4 செ.மீ., கூடலூர் பஜார், உடுமலைப்பேட்டை, பெரியாறு தலா 2 செ.மீ., பெரியகுளம், வால்பாறை, மேட்டுப்பட்டி, போடிநாயக்கனூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தித்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமநாதபுரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தித்லி புயல் இன்று ஒடிசாவில் கரையைக் கடப்பதையொட்டி, அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கள நிலவரத்தை நேற்று ஆய்வு செய்தார். கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கிற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு கஞ்சம், பூரி, குர்தா, கேந்திரபாரா, ஜெக்த்சிங்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டது.

    இதை அரசு தலைமைச்செயலாளர் ஏ.பி. பதி உறுதி செய்தார்.

    மேலும், “புயலையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா பேரிடர் அதிரடி படையினரும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஏற்கனவே அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் உதவியை இதுவரை நாங்கள் நாடவில்லை. தேவைப்பட்டால் நாடுவோம்” என அவர் குறிப்பிட்டார்.

    இதே போன்று ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; பலத்த மழை பெய்யும்; சேதங்களும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஸ்ரீகாகுளத்திலும், விசாகப்பட்டினத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.
    வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் (ரெட் அலர்ட்) செய்கிறது என இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்து டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத் தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்த மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார்.

    திருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பு நவம்பரில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது.



    தேர்தல் ஆணையம் ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று நினைத்துக்கொண்டிருந்தோம். அது மத்திய அரசுடன் சேர்ந்து செயல்படுகிறது. இப்போது வானிலை ஆய்வு மைய அறிக்கையும் நம்ப முடியவில்லை. வானிலை மையமும் இப்போது அரசியல் செய்கிறதோ என்று நம்பத்தோன்றுகிறது. நேற்று ரெட் அலர்ட் என்றார்கள். ஆனால் மழையே இல்லை.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த போது அப்போதைய கவர்னர் வித்தியாசாகர்ராவ் என்னைப் பார்த்தே சொன்னார். கல்வித்துறை தொடர்பாக நிறைய புகார்கள் வருகின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்களிடம் பேசி கமிட்டியை சரியாக அமைத்து அதை சரி செய்ய வேண்டும் என்றார்.

    தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 59 ஏக்கர் நிலம் கொண்டது. அங்கு நிறைய கட்டிடங்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். அது நல்ல கல்லூரி என்று பெயர் பெற்றதுதான். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இவ்வளவு பெரிய நிலம் உள்ளது.

    ஆனால் நீங்களோ நானோ அரை சென்ட் நிலத்தை எடுத்தால் என்ன செய்வார்கள். தெரியாமல் கம்பி வேலி போட்டால் கூட தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் குண்டர் தடுப்பு சட்டமே போட்டு விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். மிக கனமழையையொட்டி அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விளக்கினார். #TNRains #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக சூடுபிடித்திருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக பேசப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. எனவே, மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபடத் தொடங்கியது.

    தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை திடீரென சந்திக்க இருக்கும் தகவல் வெளியானது. இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.

    சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு இரவு 7.45 மணியளவில் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. #TNRains #TNREDAlert #EdappadiPalaniswami  #TNGovernor #BanwarilalPurohit
    இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. #Southwestmonsoon
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே (91 சதவீதம்) மழை பெய்து இருப்பதாகவும், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை அளவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.  #Southwestmonsoon
    ×