செய்திகள்

விபத்தில் டிரைவர் பலி: சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ‘ஸ்டிரைக்’

Published On 2017-08-14 07:15 GMT   |   Update On 2017-08-14 07:15 GMT
சென்னை துறைமுகத்துக்குள் நடந்த சென்ற டிரைவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்தவர் பரணிராஜ் (வயது 26). கண்டெய்னர் லாரி டிரைவர். நேற்று இரவு அவர் சென்னை துறைமுகத்துக்குள் நடந்து சென்றார்.

அப்போது, துறைமுகத்துக்குள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பரணி ராஜ் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

விபத்து நடந்த இடத்தில் கண்காணிப்பு காமிரா இல்லாததால் விபத்து ஏற்படுத்திய வாகனம் பற்றிய விபரம் தெரியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர்கள் சென்னை துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் மறுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். துறைமுகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும்.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கால் துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News