செய்திகள்
சோழவந்தானில் இன்று ரெயில் மோதி மாணவி பலி
சோழவந்தானில் இன்று ரெயில் மோதி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
சோழவந்தானில் உள்ள பேட்டை சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் லாவண்யா (வயது18). பிளஸ்-2 முடித்துள்ள இவர், மேற்படிப்புக்காக மதுரை மீனாட்சி கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் லாவண்யா இன்று காலை வீட்டின் அருகில் உள்ள தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த பாசஞ்சர் ரெயில் எதிர்பாராதவிதமாக லாவண்யா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லாவண்யா உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.