செய்திகள்

மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

Published On 2017-06-26 13:30 GMT   |   Update On 2017-06-26 13:30 GMT
மது குடிப்பதை உறவினர்கள் கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40) விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

குடிப்பழக்கத்தை விட்டு விடும்படி உறவினர்கள் கேட்டுக் கொண்டும் அவர் மறுத்து விட்டார். மீண்டும் குடித்து விட்டு வரவே உறவினர்கள் இவரை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த முருகன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டார்.

வீட்டில் மயங்கி கிடந்த இவரை போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே அவர் இறந்துபோனார்.

இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News