செய்திகள்

அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2017-06-23 12:00 GMT   |   Update On 2017-06-23 12:00 GMT
அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரூர்:

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கத்திரிப்பட்டி நடூரைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 40). இவரது விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் கடந்த 16-ந்தேதி இவரது சகோதரர்கள் சிவலிங்கம், சின்னராஜ், ராஜா, கார்த்திக் ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென மண் சரிந்து விழுந்ததில், குப்புசாமி படுகாயமடைந்தார். இதனையடுத்து, சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் குப்புசாமி சேர்க்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Tags:    

Similar News