செய்திகள்

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2017-06-21 06:29 GMT   |   Update On 2017-06-21 06:30 GMT
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், புதுநகர் செல்லும் சாலை அருகில் நடந்த சாலை விபத்தில், நாஞ்சிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், மாரிமுத்து, கவியரசன், ராமராசு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகிய ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் ஐந்து நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News