செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவன் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே படிப்பதற்கு ஆர்வம் இல்லாமல் இருந்த மாணவனை பெற்றோர் திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த அவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சிப்பாயூர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி விவசாயி. இவருடைய மகன் விக்னேஷ் (17). இவர் குந்தாரப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்துள்ளார். இவருக்கு படிப்பதற்கு ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் பெற்றோர் விக்னேஷ்யை திட்டிள்ளனர். இதனால் மனமுடைந்த விக்னேஷ் நேற்று வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த வீரசாமி உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விக்னேஷ் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.