செய்திகள்
கரூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது37). இவர் அங்குள்ள விநாயகா கோவில் அருகே திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பிராந்தி பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சக்திவேலை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது37). இவர் அங்குள்ள விநாயகா கோவில் அருகே திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பிராந்தி பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சக்திவேலை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.