செய்திகள்
புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கொலை: முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்
திருவள்ளூர் அருகே புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரணடைந்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் வேலாயுதம்(45) புரட்சி பாரதம் கட்சி பிரமுகர். வழக்கறிஞரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான இவரை கடந்த 18-ம் தேதி அதிகத்தூர் ஏரியில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நேரு, சின்ராசு ஆகியோர் கடந்த 19-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர். லிங்கமூர்த்தி, யுவராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான அதிகத்தூரை சேர்ந்த சத்திய மூர்த்தி சென்னையில் உள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே கொலையாளிகளை ஆட்டோவில் அழைத்து வந்த காக்களூர் பூங்காநகரை சேர்ந்த சுரேசை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை திருவள்ளூர் கோட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் வேலாயுதம்(45) புரட்சி பாரதம் கட்சி பிரமுகர். வழக்கறிஞரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான இவரை கடந்த 18-ம் தேதி அதிகத்தூர் ஏரியில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நேரு, சின்ராசு ஆகியோர் கடந்த 19-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர். லிங்கமூர்த்தி, யுவராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான அதிகத்தூரை சேர்ந்த சத்திய மூர்த்தி சென்னையில் உள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே கொலையாளிகளை ஆட்டோவில் அழைத்து வந்த காக்களூர் பூங்காநகரை சேர்ந்த சுரேசை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை திருவள்ளூர் கோட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.