செய்திகள்

குடவாசல் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2017-01-20 09:56 GMT   |   Update On 2017-01-20 09:57 GMT
குடவாசல் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள நாகலூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65) விவசாய கூலித்தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குடவாசல் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News