உள்ளூர் செய்திகள்

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2022-10-07 09:57 GMT   |   Update On 2022-10-07 09:57 GMT
  • மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பதாக ரகசிய தகவல் வந்தது.
  • 69 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை

தமிழகத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிைலயில் கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட இடிகரையில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் தகவல் வந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

சோதனையில் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 102 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த கிருஷ்ணா லே-அவுட்டை சேர்ந்த ஜெயமுருகன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இதேபோல மேட்டுப்பா ளையம் சேரன் வீதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற சிவகாமி (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 69 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போத்தனூர் அம்மா உணவகம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ேபாத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யாசர் முஸ்தபா என்ற மூசா(27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் யாசர் முஸ்தபாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

Tags:    

Similar News