செய்திகள்
மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் முககவசம் விற்பனை அதிகரிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் பிரசார கூட்டங்களுக்கு தொண்டர்கள் முககவசம் அணிந்து வருகிறார்கள்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின்போது, ‘தற்போது கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் கூட்டத்துக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று பேசிவருகிறார்.
ராமநாதபுரத்தில் முககவசம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘தினமும் தி.மு.க. பிரசார கூட்டத்தில் 1,500 முதல் 2000 முககவசங்களை விற்பனை செய்கிறேன். ஒரு முககவசத்தை ரூ.30-க்கு விற்கிறேன்’ என்றார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் வரும் பிரசார கூட்டங்களுக்கு தொண்டர்கள் முககவசம் அணிந்து வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் வியாபாரிகள் தற்காலிகமாக முககவசம் விற்பனை செய்யும் கடைகளை அமைக்கிறார்கள். தி.மு.க. நிர்வாகிகளும் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக முககவசங்களை மொத்தமாக வாங்குகிறார்கள்.