ஆன்மிகம்

நல்லத்தூரில் சிவப்பிரகாஷ சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2018-07-02 10:13 GMT   |   Update On 2018-07-02 10:13 GMT
புதுவை மாநிலம் ஏம்பலத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தில் சிவப் பிரகாஷ சுவாமிகள் கோவிலில் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.
புதுவை மாநிலம் ஏம்பலத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தில் சிவப் பிரகாஷ சுவாமிகள் கோவில் உள்ளது. இது மயிலம் பொம்மபுர ஆதீனத்துக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.

நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும், காலை 8 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலசாமிகள் தலைமையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News