ஆன்மிகம்
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம்
திருவேற்காட்டில் பிரசித்திபெற்ற தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவேற்காட்டில் பிரசித்திபெற்ற தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சன்னதி தெரு, தேரோடும் வீதி என கோவிலின் முக்கிய நான்கு மாடவீதிகளின் வழியாக சென்ற தேர், பின்னர் நிலையை வந்தடைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் வான்மதி செய்து இருந்தார். அசம்பாவிதங்களை தவிர்க்க திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சன்னதி தெரு, தேரோடும் வீதி என கோவிலின் முக்கிய நான்கு மாடவீதிகளின் வழியாக சென்ற தேர், பின்னர் நிலையை வந்தடைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் வான்மதி செய்து இருந்தார். அசம்பாவிதங்களை தவிர்க்க திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.