search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karumariamman temple"

    • திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.
    • “முடித்து நிற்கிறேன்” என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.

    திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.

    அம்மனின் திருச்சாம்பலைப் பெற்று சென்றாலே தங்கள் வாழ்வில் அதன்பின் ஏற்படும் மாற்றங்களை அவர்களே உணரத் தலைப்பட்டு விடுகிறார்கள்.

    அம்மனிடம் வாய்விட்டுச் சொல்லாமலே அவர்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருளுகிறாள்.

    "அம்மனிடம் மனமுருகித் தாயே நீ காத்து நில்" என்று வேண்டினால் போதும்.

    மலைபோல் வரும் துயர் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் பனிபோல், நீங்கி விடுகிறது.

    இங்கு மந்திரமோ, தாயத்தோ, மாய வித்தைகளோ கிடையாது.

    இறைவியிடம் பேசும் தெய்வத்திடம், அகில உலகையும் காத்து இரட்சிக்கும் தெய்வத்திடம்

    மனமுருக மனதில் வேண்டினால் போதும் அப்படியொரு சக்தி.

    அது மட்டும்மல்ல, அன்னை வாக்கிட்டால் இதுவரை தப்பியதில்லை.

    "முடித்து நிற்கிறேன்" என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.

    சிலர் வந்த உடனேயே முடியவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

    "அம்மன் முடித்து நிற்பாள்" எனக் காத்திருந்து பொறுமை காத்தவர்கள் உரிய பலனை பெறாமல் போனதில்லை.

    அன்னையின் செயல்பாடு அவள் நாதன் இட்ட கட்டளைப்படி நடைபெறுகிறது.

    தலையெழுத்தை மாற்றம் வலிமை இல்லையென்றால் அதையும் எடுத்துக் கூறிவிடுகிறாள்.

    இது நடக்கமா? நடக்காதா? என்று சோதிடம் போல் கேட்கக்கூடாது "தாயே முடித்து வை"

    என்று வேண்டுவோர்க்கு நன்மையாக முடிகிறது.

    "நாம் விரும்பியது நிறைவேற வேண்டும்" என்று வேண்டும்போது, நல்லதாயின் முடித்துவை

    என்று விபரமாகக் கேட்பவர்களுக்கு நல்லதாக நடைபெறுமாயின் முடித்து வைக்கிறாள்.

    கெடுதல் விளையுமாயின் அதனைத் தடுத்து நிறுத்தி விடுகிறாள் அத்தெய்வம்.

    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக கோ பூஜை, அம்மனுக்கு 1008 சங்காபிசேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட 4 முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    கோவில் இணை கமிஷனர் வான்மதி, முன்னாள் அறங்காவலர் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
    திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி மூலஸ்தானம் மற்றும் வளாகம் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி மூலஸ்தானம் மற்றும் வளாகம் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணை, குளிர்பானம், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டு நிறைமணி காட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நாளை (27-ந் தேதி) கோவிலில் தொங்கவிடப் பட்டுள்ள காய்கறி-கனி உள்ளிட்டவைகளை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்படும்.

    பின்னர் அவை பக்தர் களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். இதை யொட்டி கடந்த 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் தொங்கப்விடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர். கோவில் இணை கமி‌ஷனர் இரா. வான்மதி, முன்னாள் அறங்காவலர் லயன் டி.ரமேஷ், லயன் ஏ.கே.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, “நாம் வேண்டியது கிடைக்க வேண்டும், உலகில் உள்ள ஜீவராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும், மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது. இதற்கு சாகம்பரி என்ற பெயரும் உண்டு” என்றனர்.
    ×