என் மலர்
நீங்கள் தேடியது "திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்"
- திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் எனது கனவில் வந்து எனக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டது.
- என்ன செய்வது என்று தெரியாமல் மடிப்பிச்சை ஏந்தி, என்னால் முடிந்த காணிக்கையை தருகிறேன் அம்மா என்று தெரிவித்தேன்.
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான நளினி, சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்தினார்.
இது தொடர்பாக நளினி கூறியதாவது:--
என்னுடைய இஷ்ட தெய்வம், என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம், என்னுடைய உயிராக இருக்கும் தெய்வம் திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் எனது கனவில் வந்து எனக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் மடிப்பிச்சை ஏந்தி, என்னால் முடிந்த காணிக்கையை தருகிறேன் அம்மா என்று தெரிவித்தேன்.
இவ்வாறு நளினி தெரிவித்தார்.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சூரிய சோம கும்ப பூஜை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பூந்தமல்லி:
புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருவேற்காட்டில் சிவன் கோவில் அருகே ஸ்ரீ ஆதி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 1-ந்தேதி விநாயகர் வழிபாடு, கிராம தேவதை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
அதனை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி விக்னேஸ் வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, லட்சுமி ஹோமம், பிரம்மச் சாரிய பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணா ஆகூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. சூரிய சோம கும்ப பூஜை ஹோமம், பவனாபி ஷேகம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலமூர்த்திக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிலையில் நான்காம் கால யாக பூஜை, சிறப்பு ஹோமம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் வேத சிவாகம வித்யாபூஷனம் ஸ்தானிகர் சந்திரசேகர சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கோபுர கலசங்கள் மற்றும் விமான கும்பாபிஷேகம், மூலவர் ஆதி கருமாரியம்மன், மற்றும் பரிவார மூர்த்திகள் விநாயகர், பாலமுருகன், பால சாஸ்தா, மகா கும்பாபி ஷேகமும், மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், திருவேற்காடு நகர மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், டி.ஜெயக்குமார், மற்றும் பல்வேறு மடங்கள், ஆன்மீக ஆதீனங்களைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள் மற்றும் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சாண்டி பி.செல்வராஜ், ஏ.நாராயணன், பி.கோவிந்தசாமி, கே.சந்துரு, ஏ.ஆர். பாலசுப்ரமணியன், டி.பாபுசேகர், இரா.சகா தேவன், ஏ.கே.சுப்பிரமணிய முதலியார், மீனாட்சி அம்மாள் குடும்பத்தினர், அரிமா ஆன்மீக அன்பர்கள் குழு, ஏ.கே.எஸ்.பிரதர்ஸ் குடும்பத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
- 2006-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பூந்தமல்லி, திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது.
புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். 2006ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டு ஆகம முறைப்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.
கொரோனா காலம் என்பதால் நடைபெறவில்லை. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தற்போது பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, திருக்கோவில் பிரகாரத்தை அகலப்படுத்துவது, கோவில் மண்டபம், ராஜகோபுரம், கருங்கல்லால் புனரமைப்பது என ரூ.18 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது.
சுமார் இரண்டு ஆண்டு காலம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிசேக விழா நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, முன்னாள் அறங்காவலர் லயன். டி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






