search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruverkadu karumariamman"

    • திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.
    • “முடித்து நிற்கிறேன்” என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.

    திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.

    அம்மனின் திருச்சாம்பலைப் பெற்று சென்றாலே தங்கள் வாழ்வில் அதன்பின் ஏற்படும் மாற்றங்களை அவர்களே உணரத் தலைப்பட்டு விடுகிறார்கள்.

    அம்மனிடம் வாய்விட்டுச் சொல்லாமலே அவர்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருளுகிறாள்.

    "அம்மனிடம் மனமுருகித் தாயே நீ காத்து நில்" என்று வேண்டினால் போதும்.

    மலைபோல் வரும் துயர் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் பனிபோல், நீங்கி விடுகிறது.

    இங்கு மந்திரமோ, தாயத்தோ, மாய வித்தைகளோ கிடையாது.

    இறைவியிடம் பேசும் தெய்வத்திடம், அகில உலகையும் காத்து இரட்சிக்கும் தெய்வத்திடம்

    மனமுருக மனதில் வேண்டினால் போதும் அப்படியொரு சக்தி.

    அது மட்டும்மல்ல, அன்னை வாக்கிட்டால் இதுவரை தப்பியதில்லை.

    "முடித்து நிற்கிறேன்" என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.

    சிலர் வந்த உடனேயே முடியவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

    "அம்மன் முடித்து நிற்பாள்" எனக் காத்திருந்து பொறுமை காத்தவர்கள் உரிய பலனை பெறாமல் போனதில்லை.

    அன்னையின் செயல்பாடு அவள் நாதன் இட்ட கட்டளைப்படி நடைபெறுகிறது.

    தலையெழுத்தை மாற்றம் வலிமை இல்லையென்றால் அதையும் எடுத்துக் கூறிவிடுகிறாள்.

    இது நடக்கமா? நடக்காதா? என்று சோதிடம் போல் கேட்கக்கூடாது "தாயே முடித்து வை"

    என்று வேண்டுவோர்க்கு நன்மையாக முடிகிறது.

    "நாம் விரும்பியது நிறைவேற வேண்டும்" என்று வேண்டும்போது, நல்லதாயின் முடித்துவை

    என்று விபரமாகக் கேட்பவர்களுக்கு நல்லதாக நடைபெறுமாயின் முடித்து வைக்கிறாள்.

    கெடுதல் விளையுமாயின் அதனைத் தடுத்து நிறுத்தி விடுகிறாள் அத்தெய்வம்.

    கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதிக்கு சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம்.
    கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதிக்கு சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமையும்.

    மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்றுள்ளனர். தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.

    தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.
    தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.
    தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.

    பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.
    பூர நட்சத்திரம் - கலைகளில் வல் லமை பெறலாம்.
    சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறை வேறும்.

    புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.
    நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்
    திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலேபோதும் குறைகள் மறைந்து விடுகின்றன. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள ஆடி திருவிழா நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளலாம்.
    திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இதனால் அந்த பகுதியை வேலங்காடு என்று அழைத்தனர். அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது. பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.

    கடந்த நூற்றாண்டில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது. இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது. புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று, அன்னையை அடிபணிவோருக்கு அபயம் அளிக்கிறது. புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

    அன்னை காட்சி தரும் கர்ப்பக்கிரகத்தில் பதிவிளக்கு என்னும் அணையா விளக்கு, அது ஏற்றப்பட்ட நாளில் இருந்து எரிந்து கொண்டே இருக்கிறது. நெய்யால் எரியும் இந்த விளக்கின் சுடரொளியில், அன்னையின் இரு வடிவங்களும் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.

    சிரசு மட்டும் காட்டும் உக்கிர நாராயணியின் கண்கள் ஒழுக்கம் இல்லாதவர்களை மிரட்டுகின்றன. நல்லவருக்கு அபயமளிக்கின்றன. சிலை வடிவமான கருமாரி காண்போர் கருத்தைக் கவரும் விதத்தில் அழகுற காட்சி தருகிறாள். மேல் வலது கரத்தில் உடுக்கையும் பாம்பும். மேல் இடது கரத்தில் திருசூலம். கீழ் வலது கரத்தில் கத்தி, கீழ் இடதுகரத்தில் அமுத கலசம் ஏந்தியுள்ளாள்.

    ஒரு காலத்தில் மண்டையோட்டு மாலை தவழ்ந்த அன்னையின் மார்பில், இப்போது எலுமிச்சை மாலை அணிவிக்கப்படுகிறது. உதட்டில் சிறு புன்னகை. கிழக்கு நோக்கும் கருமாரி! கண் மூடி வணங்கி நின்றால் உடலில் சிலிர்ப்பு ஓடுகிறது. மனதில் அமைதி நிலவுகிறது.

    திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலேபோதும் குறைகள் மறைந்து விடுகின்றன. அம்மனின் திருச்சாம்பலைப் பெற்றுச்சென்றாலே தங்கள் வாழ்வில் அதன்பின் ஏற்படும் மாற்றங்களை அவர்களே உணரத்தொடங்கி விடுகிறார்கள்.

    அம்மனிடம் வாய்விட்டுச் சொல்லாமல் அவர்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருளுகிறாள். அம்மனிடம் மனமுருகித்தாயே நீ காத்து நில் என்று வேண்டினாள் போதும், மலைபோல் வரும் துயர் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பனிபோல், நீங்கி விடுகிறது.

    கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித்தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமையும்.
    மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்றுள்ளனர். தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

    இத்தகைய சிறப்புடைய திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆனி கடைசி ஞாயிறு முதல் 12 வாரங்கள் தொடர்ந்து அன்னை கருமாரிக்கு ஆடிப் பெருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 1008 பால் அபிஷேகம், நவகலசம், சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புற்றலங்காரம், 108 பால் குடம், படையல் போன்றவையும் தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.

    ஞாயிறு காலை மற்றும் மாலை நேரங்களில் சொற்பொழிவு, இன்னிசை பரதநாட்டிய கச்சேரிகள் நடைபெறும். ஒன்பதாம் ஞாயிறு காலை தேர் உலா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    கடந்த 17-ந்தேதி முதல் வார ஆடி நிகழ்ச்சிகள் நடந்தது. அடுத்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
    ஜூலை 31-ந்தேதி-: ஆடி 3-வது செவ்வாய்க்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 3-ந்தேதி-: ஆடி 3-வது வெள்ளிக்கிழமை, காலை 11 மணி - நவக வசம்(கட்டளை)
     ஆகஸ்டு 5-ந்தேதி-: ஆடி 3-வது ஞயிற்றுக்கிழமை, காலை11மணி - 108 குடம் தயிர் அபிஷேகம், 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 7-ந்தேதி-: ஆடி 4-வது செவ்வாய்க்கிழமை, காலை 11 மணி - நவ கலச அபிஷேகம்.

    ஆகஸ்டு 10-ந்தேதி-: ஆடி 4-வது வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி - ஒரு கவசம், 6 வருடை அலங்காரம்.
    ஆகஸ்டு 11-ந்தேதி-: ஆடி அமாவாசை (சனிக்கிழமை), மாலை 6 மணி - சந்தனக் காப்பு முழு படையல்.
    ஆகஸ்டு 12-ந்தேதி-: ஆடி 4-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணி - 108 குடம் பஞ் சாமிருத அபிஷேகம்.
    ஆகஸ்டு 13-ந்தேதி-: ஆடிபூரம், காலை 6 மணி - சந்தனகாப்பு அலங்காரம், இரவு 8 மணி - வீதி உலா.
    ஆகஸ்டு 14-ந்தேதி: ஆடி 5-வது செவ்வாய்க் கிழமை, மாலை 6 மணி - சந்தன காப்பு.

    ஆகஸ்டு 17-ந்தேதி-: ஆடி 5-வது வெள்ளிக் கிழமை, காலை 11 மணி - தங்க கவச அலங்காரம்.
    ஆகஸ்டு 19-ந்தேதி-: ஆடி 5-வது ஞாயிற்றுக் கிழமை, மாலை 6 மணி - 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 21-ந்தேதி-: ஆடி 6-வது செவ்வாய்க்கிழமை, காலை 11 மணி - புற்று அலங்காரம்
    ஆகஸ்டு 24-ந்தேதி-: ஆடி 6-வது வெள்ளிக் கிழமை மற்றும் வரலட்சுமி விரதம், காலை 5 மணி - 108 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு26-ந்தேதி-: ஆடி 6-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணிக்கு 1008 சங்காபிஷேகம்.

    ஆகஸ்டு 28-ந்தேதி-: ஆடி 7-வது செவ் வாய்க்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    ஆகஸ்டு 31-ந்தேதி-: ஆடி 7-வது வெள்ளிக்கிழமை, காலை 11 மணி - தங்க கவசம் முழு படையல்.
    செப். 2-ந்தேதி-: ஆடி 7-வது ஞாயிற்றுக் கிழமை மற்றும் கோகுலாஷ்டமி, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    செப். 4-ந்தேதி-: ஆடி 8-வது செவ்வாய்க் கிழமை, மாலை 6 மணி - மஞ்சள் காப்பு.
    செப். 7-ந்தேதி -:ஆடி 8-வது வெள்ளிக் கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபி ஷேகம்.

    செப்.9-ந்தேதி-: ஆடி 8-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி-108 இளநீர் அபி ஷேகம்.
    செப். 11-ந்தேதி-: ஆடி 9-வது செவ்வாய்க் கிழமை, மாலை 3 மணி - துர்க்கை அபி ஷேகம்.
    செப்.13-ந்தேதி-: சதுர்த்தி விழா, காலை 9 மணி - மூஷிக வாகனத்தில் வீதி உலா.
    செப். 14-ந்தேதி-: ஆடி 9-வது வெள்ளிக் கிழமை, மாலை 6 மணி - சந்தன காப்பு.
    செப்.16-ந்தேதி-: ஆடி 9-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 7 மணி - தேரோட்டம்.

    செப். 18-ந்தேதி-: ஆடி 10-வது செவ் வாய்க்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    செப். 21-ந்தேதி-: ஆடி 10-வது வெள்ளிக்கிழமை, காலை 11 மணி - 1008 சங்காபிஷேகம்.
    செப். 23-ந்தேதி-: ஆடி 10-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி - 108 குடம் மஞ்சள் அபிஷேகம்.
    செப். 24-ந்தேதி-: நிறைமணி காட்சி ஆரம்பம்.
    செப். 25-ந்தேதி-: ஆடி 11-வது செவ்வாய்க் கிழமை, இரவு 7 மணி - ஆஞ்சநேயர் வடை மாலை.

    செப். 26-ந்தேதி: நிறைமணி காட்சி நிறைவு
    செப்.28-ந்தேதி-: ஆடி 11-வது வெள்ளிக் கிழமை காலை 5 மணி - 108 சங்காபிஷேகம்
    செப். 30-ந்தேதி-: ஆடி 11- வது ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணி - 108 குடம் கனிகள் அபிஷேகம்.
    அக்.3-ந்தேதி-: ஆடி 12-வது செவ்வாய்க் கிழமை காலை 11 மணி - தங்ககவசம்.

    அக். 5-ந்தேதி-: ஆடி 12-வது வெள்ளிக்கிழமை காலை 5 மணி - 108 சங்காபிஷேகம்.
    அக்.7-ந்தேதி-: ஆடி 12-வது ஞாயிற்றுக் கிழமை, காலை 11 மணி - 108 மலர் அபிஷேகம்
    இரவு 7 மணி - அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா.
    திருவேற்காட்டில் கருமாரியம்மனின் ஆலயம் உயர்ந்த ராஜகோபுரத்துடனும், பெரும் மதில் சுவர்களுடனும், விசாலமான பிரகாரத்துடனும் அமைந்துள்ளது.
    திருவேற்காட்டில் கருமாரியம்மனின் ஆலயம் உயர்ந்த ராஜகோபுரத்துடனும், பெரும் மதில் சுவர்களுடனும், விசாலமான பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. ஆலயத்தின் நடுவில், அன்னை கருமாரி அமர்ந்து அருள்பாலித்து வருகின்றாள்.

    கருமாரி அம்மன் புற்றில் இருந்து தோன்றியவள் இதனால் உடல் முழுமையையும் மறைத்தவளாய், தன் முகத்தினை மட்டும் காட்டிய நிலை கொண்டவளாய் இருக்கிறாள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். காலினை மடித்து மற்றொரு காலினை தாழ்த்திய நிலையோடு அமர்ந்தவளாய் காட்சி தருகிறாள் அன்னையின் இந்த அழகான தோற்றத்தைக் காண்போர் முற்பிறவிப் பாவங்கள் அனைத்தும் களையப்பெற்று புண்ணியங்கள் பல பெற்றிடுவர்.

    கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித் தாயினை அவள் சன்னதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் பெறலாம். அது மட்டுமின்றி நாம் விரும்பிய வண்ணமே அருளும் அன்னையவள் நம் கருமாரி ஆவாள்.

    இத்தலத்து அன்னையை திருமணம் ஆகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமைந்து வருவது அன்னையின் அருள் சக்திக்கு சான்றாய் விளங்கி வருவதை கண்கூடாய் காணலாம்.

    ×