search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruverkadu"

    • தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    • மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிற சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.

    மற்ற நாட்களில் நீலநிற சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும்.

    பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    சிவப்பு சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும்.

    பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளை சேலையை சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம்.

    வெள்ளை சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

    வெள்ளை சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும்

    திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம்.

    அவ்வாறு வழிபடுகையில் இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன தீபங்கள்

    ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக கோ பூஜை, அம்மனுக்கு 1008 சங்காபிசேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட 4 முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    கோவில் இணை கமிஷனர் வான்மதி, முன்னாள் அறங்காவலர் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
    திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி மூலஸ்தானம் மற்றும் வளாகம் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி மூலஸ்தானம் மற்றும் வளாகம் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணை, குளிர்பானம், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டு நிறைமணி காட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நாளை (27-ந் தேதி) கோவிலில் தொங்கவிடப் பட்டுள்ள காய்கறி-கனி உள்ளிட்டவைகளை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்படும்.

    பின்னர் அவை பக்தர் களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். இதை யொட்டி கடந்த 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் தொங்கப்விடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர். கோவில் இணை கமி‌ஷனர் இரா. வான்மதி, முன்னாள் அறங்காவலர் லயன் டி.ரமேஷ், லயன் ஏ.கே.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, “நாம் வேண்டியது கிடைக்க வேண்டும், உலகில் உள்ள ஜீவராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும், மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது. இதற்கு சாகம்பரி என்ற பெயரும் உண்டு” என்றனர்.
    ×