என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் குடிநீர் மிஷினில் கிடந்த பல்லி, பூச்சிகள்- பக்தர்கள் அதிர்ச்சி
    X

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் குடிநீர் மிஷினில் கிடந்த பல்லி, பூச்சிகள்- பக்தர்கள் அதிர்ச்சி

    • தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    திருவேற்காடு:

    திருவேற்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்களின் தாகத்தை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தின் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தில் அட்டைப்பூச்சி, பல்லி, பாசிகள் இருப்பதை கண்ட பக்தர் ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவியது.

    சுகாதாரமற்ற நிலையில் உள்ள அந்த தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் குடிப்பதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அதனை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×