search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவேற்காடு"

    • தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    • மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிற சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.

    மற்ற நாட்களில் நீலநிற சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும்.

    பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    சிவப்பு சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும்.

    பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளை சேலையை சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம்.

    வெள்ளை சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

    வெள்ளை சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும்

    திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம்.

    அவ்வாறு வழிபடுகையில் இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன தீபங்கள்

    ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    • மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள்.
    • சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள்.

    வேயுறு தோனி பங்கன்! விடமுண்ட கண்டன்! மாதொரு பாகனாய் வீற்றிருக்கும் இடம் திருக்கயிலை. ஓங்காரத்தின் உட்பொருள்! பரம்பொருள்!! அம்மையும் அப்பனுமாய் அமர்ந்திருக்கும் இடம் கயிலைமலை. அருளே உருவானவன். பொன்னவிர் மேனியான். கங்கையும் திங்களும் அணிந்தவன்.

    அவர்கள் இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் கொன்று வந்தான்.

    தேவகி எட்டாவது முறையாக கர்ப்பமானாள். அதே சமயத்தில் கோகுலத்தில் நந்தகோபனின் மனையாளும் கர்ப்பமானாள். அவளது கர்ப்பத்தில் உதித்தவள் மாயை என்னும் மகாசக்தி.

    இறைவனின் எண்ணப்படி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம். வசுதேவர் குழந்தைகளை இடம் மாற்றினார். மாயக்கண்ணன் ஆயர்பாடியில்! மாயாசக்தி கம்சனின் சிறைக்கூடத்தில்.

    வாளெடுத்து வந்தான் கம்சன். பச்சிளம் குழந்தையைக் கொல்லும் மாவீரன். பிறந்தது பெண்ணென்றாலும் கொல்வேன் என்று அந்த மாணிக்கத்தை தூக்கி வீசினான்.

    அடுத்த கணம்...

    அந்தரத்தில் நின்று சிரித்தாள் அந்த மகாசக்தி! அடேய் கொலைப்பாதகா! நான் கருமாறி வந்தவளடா! ஊர் மாறி பேர் மாறி உருமாறி கருமாறி வந்த என்னைக் கொல்லப் போகிறாயா? அது உன்னால் முடியுமா? மும்மூர்த்திகளாலும் முடியாத செயலை, அற்பனே, நீ செய்ய முனைந்தாயா? உன்னை ஒரே நொடியில் பொடிப்பொடியாக்கிவிடுவேன். ஆனால் மண்ணுலக மக்களுக்கு அருள் செய்ய புறப்பட்டவள் நான்! உன்னைக்கொன்று மறுபடியும் ரௌத்காரியாக மாற விரும்பவில்லை.உன்னை கொல்ல வேறொருவன் பிறந்துவிட்டான் என்று கூறி அந்தரத்தில் நின்றவள் மறைந்தாள்.

    மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள். கிருஷ்ணமாரியாகத் தோன்றியவளின் உக்கிர சொரூபத்தைக் கண்டு தேவர்களே திகைத்தனர். அசுரரின் கொட்டத்தை அடக்கிட சாம்பலை அள்ளித் தந்தார் சிவபெருமான்.

    சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள். கலியின் வெங்கொடுமை மீண்டும் தலைதூக்கியது. மக்களை காக்க மாதா மீண்டும் தோன்றினாள் மீண்டும் கருமாரியாகக் கோவில் கொண்டாள்.

    • திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.
    • அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்!

    சைவத் திருமுறைகள் பன்னிரண்டு அதில் முதலாம் திருமுறையை அருளியவர் திருஞான சம்பந்தப் பெருமான். பதினொரு இன்சுவைப் பாக்களால் திருவேற்காட்டைப் பாடுகிறார். அதில் உறையும் வேதபுரீசனைப் பாடுகிறார்.

    1. உயரிய பரம்பொருளை நினைப்பவரே தேவர். அவருக்கு நற்கதியை அளிப்பவன் வெள்ளிமலையான். அவன் விரும்பி உறையும் இடம் வேற்காடு.

    அன்னை கருமாரியின் அருள் வரலாறு

    தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்த தாய் தான் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத் தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் தந்தையிடமிருந்து பெறுவதே குழந்தையின் இயல்பு.

    அதேபோல் ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலா பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் காட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

    திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.

    உடுக்கை ஏந்திய கரம் ஒன்று

    திரிசூலம் தாங்கிய கரம் மற்றொன்று

    வாள் தாங்கிய வளைக்கரம் இன்னொன்று

    பொற்கிண்ணம் ஏந்திய பூங்கரம் வேறொன்டு

    நாற்கரத்து நாயகி! சிவசக்தியாய் அமர்ந்த நிலையில் ஒரு திருக்கோலம்!

    தலைகாட்டி உடல் மறைந்த நாரணியாய் மற்றொரு கோலம்.

    வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் தேவி! அனைத்து துன்பங்களையும் வேரறுக்கும் அனந்த நாயகி!

    ஆயிரம் கண்ணுடையாள்!

    ஆதிபராசக்தி

    வேற்காட்டுக் கருமாரி

    கண்ணின் கருமணி போன்றவள்

    ஒரே ஒரு முறை தன்னிடம் அடைக்கலம் வந்தோரையும் ஆதரிப்பவள். வளமான வாழ்வளிப்பவள். சகல செல்வங்களும் தரும் தயாபரி. அகிலமதிலே நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், வெற்றி, தீமை கழித்து நல்லூழ் நாட்டுதல், நுகர்ச்சி ஆகிய பதினாறு பேறும் கண்சிமிட்டும் நேரத்தில் அருள்பவள்.

    பாமரர்களின் பரிபூரண நம்பிக்கை!

    படித்தவர்களின் பரம்பொருள் நாயகி!

    பதவியில் இருப்பவர்க்குப் பரதேவதை!

    செல்வாக்கு உள்ளவர்களுக்கு அஷ்டலட்சுமி!

    கிராம மக்களுக்குக் குலதெய்வம்

    நகர மக்களுக்கு பிரும்மாண்ட நாயகி!

    அனைத்து மக்களுக்கும் அன்புத்தாய்

    அகில உலகுக்கும் ஆதிபராசக்தி!

    ஏழை பணக்காரன் முதல் படித்தவன், பாமரன் ஈராறாக அவள் பதம் காண ஓடிவருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நித்தில் நாயகி!

    அந்த அன்னையின் வடிவழகு! அதை ஆண்டாண்டு காலமாய் பாடிய பாவலர் கோடானு கோடி!

    மனிதரும், தேவரும், மாயமா முனிவரும் வந்து சென்னி

    குனிதரும் சேவடிக் கோமளேமே! கொன்றை வார்சடைமேல்

    பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

    புனிதரும் நீயுமென் புந்தி என்னாளும் பொருந்துக

    என்று நமது அபிராமிப் பட்டரை போல் பாடிப்பரவியோர் பலபேர்!

    நமது அன்னையை மனிதர்கள் போற்றுவார்களாம். தேவர்கள் ஏத்துவார்களாம். மாயம் செய்யும் மாமுனிவர் பணிவார்களாம். சென்னியைக் குனித்துச் சேவடி தொழுவார்களாம். அந்த கோமளவல்லி அன்னை பராசக்தியை! கொன்றைப்பூவை வரிச்சடைகளில் சூடியவர் மனேஸ்வரன். பனிபொருந்திய குளிர்தரும் நிலவை அந்த வார்சடைகளில் பொருத்தி வைத்தவர். அதுமட்டுமா? பாம்பை மலராகச் சூடியவர். பகீரதியை தலைமேல் சுமந்தவர். அந்த தயாநிதி உடனுறை தாயாகிய அவளை என்னாளும் என் நினைவில் பொருந்துகவே என்று வேண்டி உருகுவோர் எண்ணற்ற பேர்.

    அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்! வேப்பிலை தன்னிலே வெப்புநோய் தணிப்பவளே! சாம்பலிலே உயிர்காப்பவள்!

    எண்ணும் எழுத்தும் இருகரமாய்க் கொண்டவள்! பண்ணை பாடும் போது பூரிப்பவள்! பரதத்தை ஆடும்போது புன்னகைப்பவள்! பைந்தமிழ் கேட்டு இன்புறுபவள்! நண்ணும்போது நயந்து அருள்பவள்! விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் வித்தகி! திருவேற்காட்டு வேற்கண்ணி!

    இதைத்தான் அருட்கவி கருமாரிதாசர்

    எண்ணும் எழுத்தும் இருக்கையாய்க் கொண்டிடும் ஏந்திழையே

    பண்ணும் பரதமும் பைந்தமிழ்ப் பாடலும் பாடிடவே

    நண்ணும் பொழுதில் நயந்தருள் செய்கரு மாரியளே

    விண்ணும் உலகமும் வாழ்ந்திடும் வித்தகி வேற்கண்ணியே

    என்ற பாடி மகிழ்கிறார்.

    அந்த வேற்கண்ணியை-வேற்காட்டு மாரியை முழுதும் அறிந்தவள் யாருளர்?

    அன்னவளுக்கு வரலாறு உண்டோ?

    புராணம் இருக்கிறதோ?

    சில மதியீனர்கள் சொல்வார்கள்- மாரிக்கு ஏது புராணம்? குறி சொல்லும் குறத்திதானே அவள்? எல்லை காக்கும் காளி தானே அவள்? ஊரைக் காக்கும் படாரிதானே அவள்? என்று!

    அறியாமையால் கேட்கப்படும் கேள்வி! வேதமந்திரங்களே அவள் பெயரை முழங்குகின்றன. ஸ்ரீகிருஷ்ணமாரி என்ற அட்சரங்களால் வழங்குகின்றன.

    கருணையை மாரிபோல் பொழிபவள்

    கருமாரி என்னும் திருநாமம் கொண்டவள்

    நாற்கரம் தாங்கிய நாயகி! நற்கதியளிக்கும் நாரணி! ஐந்து பூதங்களுக்கு அப்பாற்பட்டவள்! பஞ்சாட்சரி! ஆறுமுகனுக்கு வேலைத் தந்த அன்னை பரமேஸ்வரி!

    யோகம், ஞானம், வேதங்களுக்கு எட்டாதவள்! ஏங்குவோர்க்கு ஏக்கம் தீர்க்கும் அருமருந்து!

    வேதங்கள் அறிய முடியாத வித்தகி! வேப்பிலையை விரும்பிச் சூடியவள்! உடுக்கையலி கேட்டு ஓடிவருபவள்! கேட்க வரம் தந்த நம்மைக் காத்து இரட்சிப்பவள்!

    அந்த அன்னையின் வரலாற்றை அன்பு மனத்தோடு படியுங்கள்! உங்கள் கலி நீங்கி வளம் ஓங்கும்.

    கருமாரி பெயர் காரணம்

    மாரி என்றால் மழை.

    மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே என்று குறிஞ்சிக் கபிலர் பாடுவார்.

    கருமாரி என்றால் கருமையான மேகம் எனப்பொருள் கொள்ளலாம்.

    உயிர்கள் வாடுவதைக் கண்டு கருமாரி பொழியும். இது விண்மாரி! அதேபோல் அடியவர் வாட்டத்தை கண்டு அன்னை அருள்மாரி பொழிவாள்! இது மண் மாரி! மண்ணுலகைக் காக்கும் மகாமாரி!

    அன்னை ஆயிரங் கண்ணுடையாள்! கோடி கோடி வடிவங்களில் தோன்றுபவள்! அவ்வடிங்களில் ஒன்பது வடிவங்கள் சிறப்புடையவை! அவ்வடிவங்களில் ஒன்று குளிர் மாரி வடிவம். அவள் சன்னதியின் முதல் படியில் கால் வைக்கும் போதே மனம் குளிரும். மதிகுளிரும். பிறந்த வீட்டில் நுழையும் பெண்ணைப் போல தாய் வீட்டுக் கருணை நெஞ்சில் நிறையும்.

    துர்க்கை, மகாகாளி, மகாலட்சுமி முதலான அன்னையின் அம்சம் தான் கருமாரி! ஆதிபராசக்தி, மகிஷா சூரமர்த்தினி ஆகிய சொருபங்களின் மூலம் தான் கருமாரி!

    • ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது.
    • முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.

    புராண இதிகாசக் காலங்களில் தத்தாத்திரேயர் பரசுராமர், அகத்தியர், துர்வாசர், திருமூலர் ஆகிய ஞானிமுனிவர்கள் அன்னையை வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

    அன்னை வழிபாட்டின் வகைப்பாடு

    அன்னையை வீரத்தாயாகப் போற்றி மறக்கருணை நெறியில் வழிபடுவது வடவர் மரபு. அவளை அழகும், அருளும் கொண்டவளாக அறக்கருணை நெறியில் வழிப்படுவது தென்னவர் மரபு.

    இந்த தென்னாட்டு முறைக்கு ஸ்ரீ வித்யை என்று பெயர். இந்த ஸ்ரீவித்யைக்கு மூன்று கோணங்கள் உள்ளன. அவை 1. மந்திரம், 2. தந்திரம், 3. எந்திரம். ஸ்ரீவித்யையில் தேர்ச்சி பெற்றோர் உள்ளத்தால் சாக்தராகவும், நோக்கத்தால் சைவராகவும், அனுட்டானத்தால் வைணவராகவும் விளங்குவர்.

    தென்னிந்தியாவில் அன்னைஅருள்பாலிக்கும் அருள் தலங்களில் அளப்பரிய பெருமை மிக்க தலம். கருணை ஊற்றெடுக்கும் வேற்காட்டுத் தலம். அத்தலத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிவதும், அத்தலத்தை நினைப்பதும், அங்கு சென்று அன்னையைத் தரிசிப்பதும் நம்மை உயர்விக்கும் உய்விக்கும்.

    திருவேற்காட்டுத் தலத்தின் வரலாறு

    மண்ணளக்கும் தாய் திருவேற்காட்டில் மகிமையுடன் வீற்றிருக்கிறாள். திருவேற்காடு... புண்ணிய பூமி.... புனிதத்தலம்.... கருமாரியம்மனின் கருணை நிலையம். இது சென்னைக்கு வடமேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

    அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இங்கு அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான்மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ!

    வெள்வேல மரங்களின் வரலாறு

    பிரளயம்... அது யுகமுடிவில் வருவது... வெள்ளம் பெருகி உலகை மூழ்க வைப்பது உலகின் முடிவு. அது போன்ற ஒரு முடிவும் ஒரு முறை வந்தது. வெள்ளத்தால் உலகம் முடிவுற்றது. முடிவுக்குப் பின் மீண்டும் தொடக்கமல்லவா? சிவபெருமான் மீண்டும் உலகைப் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது.

    பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் அகிலாண்ட இயக்கம் ஆரம்பமானது.

    வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய அவ்விடத்தின் ஒரு பகுதி தேவர் கண்ட மடு என்று அழைக்கப்பட்டது. வேற்காட்டின் வரலாறு இதுதான். இந்த வேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    பாலி நதியின் வரலாறு

    அவுணர்கனை அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். அந்த அன்பு தெய்வத்திற்கு பாலாபிஷேகம். காமதேனுவின் மகள் நந்தினிப் பசு. அந்த நந்தினியின் பாலில் கந்தக் கடவுளுக்கு அபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.

    பால் ஆறாகப் பெருகிறது. பெருகிப் பெருகி மண்ணில் பாய்ந்தது. பொங்கி வழிந்து புறப்பட்டது. அதுதான் பாலி ஆறு என்று பெயரும் பெற்றது. அந்த பாலி ஆற்றின் கரையில் அமைந்த தலமே திருவேற்காடு.

    விஷங்கள் தீண்டாத வேற்காட்டின் வரலாறு

    ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது. கார்மேக வண்ணன் கடுங்கோபம் கொண்டான், கடவுளுக்கும் கோபம்... சினத்தீ சிறுமையில் தள்ளும் அதுவும் யார் மேல் கோபம்? சிவத் தொண்டன் மீதா?

    தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதாயிற்றே!

    நீலமேக வண்ணன் ததீசியின் மேல் போர் தொடுத்தான். பல கணைகளை வீசினான். ததீசியை சிவபக்தி காத்தது. கணைகள் வீணாயின. இறுதியில் சக்கரத்தை எடுத்தான் தாமோதரன். ஏவினான் முனிவன் மேல்... சுதர்சனம் ஒளியைக் கக்கிக் கொண்டு ஓடியது. ததீசி முனிவன்மேல் மோதியது. ஆயினும் பயனென்ன? சுதர்சனம் வலிமை இழந்தது. கூர்மங்கி சுருண்டு விழுந்தது.

    தாமரைக் கண்ணன் மனம் தளர்ந்தான். சுதர்சனமின்றிச் சோர்வுற்றான். ஈசனை எண்ணிப் பூசிக்க முனைந்தான். அவன் பூசித்த அந்த இடம் திருவேற்காடு.

    தினந்தோறும் ஆயிரம் மலர்களை எண்ணி வைத்து ஈசனை பூசிக்க எண்ணம் கொண்டான். அதன்படி ஆயிரம் தாமரைப்பூக்கள் அன்றாடம் ஈசனின் திருவடிகளை ஆராதித்தன.

    ஒரு நாள் இறைவன் அந்தத் திருமாலைச் சோதித்தான். சிவ சோதனைக்குத் திருமால் மட்டும் விதி விலக்கா என்ன? ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. பூசை பூரணத்துவம் அடையாது நின்றது.

    உடனே உணர்ச்சி பெருக்குடன் ஒரு காரியம் செய்தான். சியாமள வண்ணன். தனது ஒரு கண்ணைப் பெயர்த்தான். உதிரம் கொட்டக் கொட்ட ஆண்டவனின் பரதத்தில் சமர்ப்பித்தான்.

    இறைவன் மாலவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தான். இழந்த திருச்சக்கரத்தை மீண்டும் வழங்கினான். கண்ணை அர்ப்பணித்த கார்முகில் வண்ணனுக்குக் கண்ணன் என்ற பெயரும் வழங்கினான். இந்த தியாக வரலாற்றை அருகிருந்து கண்ணுற்றான் ஆதிசேடன். இந்த மண் புனிதமானது. எனது தலைவனின் ரத்தம் சிந்திய இடம் இது. எனவே இந்த இடத்தில் எங்கள் பாம்பு இனத்தால் யாரும் இரத்தம் சிந்தக்கூடாது என சங்கல்பம் செய்தான்.

    ஆகையால் தான் இன்று வரை இங்கே எந்த உயிரையும் அரவம் தீண்டியதாக வரலாறு இல்லை.

    ஆயிரம் மலர்கள் வைத்துப்பூசித்த இடம் இன்றும் உள்ளது. அது திருவேற்காட்டின் பகுதி... கண்ணபாளையம்... அரவங்கள் விடம்தீண்டாத வரலாறு இதுதான்.

    அகத்தியருக்குக் காட்சி தந்த அருள் வரலாறு

    ஒரு முறை அம்மைக்கும், அப்பனுக்கும் திருமணம். குழந்தைகள் நடத்தும் கோலாகலத் திருமணம். இறைவனின் இனிய லீலைகளில் ஒன்று. தேவர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், கந்தர்வர், கின்னார், கிம்புருடர் என ஏராளமானோர் திரண்டனர்.

    கைலாயம் கலங்கியது. தெய்வசக்தி ஒரே இடத்தில் திரண்டதால் பூதேவி ஒரு பக்கமாகத் தாழ்ந்தாள்.

    அனைவருக்குமே அம்மையப்பனின் திருமணத்தைக் காண ஆவல். இந்த நிலையில் ஒரு பக்கமாகத் தாழ்ந்தது உலகம். அனைவரும் அஞ்சினர். ஆண்டவனிடம் முறையிட்டனர்.

    அஞ்சாதீர்கள் குழந்தைகளே என்று அபயக்கரம் காட்டினான் எம்பெருமான்.

    ஒரு தட்டு சாய்ந்தால் இன்னொரு தட்டில் எடை கூட்டுகிறோம். அதுபோல ஒரு பக்கம் சாய்ந்த புவியை இன்னொரு பக்கம் எடையேற்றிக் கூட்டுவோம்.

    வடக்கே தாழாதிருக்க தெற்கே எடையை ஏற்றுவோம்.

    தெற்கே எவ்வாறு எடையேற்றுவது? வடக்கே கூடியுள்ள கூட்டத்தைப் போல மற்றொரு கூட்டத்தை நிற்க வைப்பதா?

    தேவையில்லை. ஒரே ஒரு முனிவனை நிற்கவைப்போம். அதுவும் குள்ளமான முனிவனை...

    என்னே அதிசயம். கோடானு கோடி மக்களுக்கு ஒரு குறுமுனி ஈடாவாரா?

    ஆம்! கோடானு கோடி மக்களின் பக்திக்கு ஈடாகத்தான் அந்த குறுமுனிவனின் பக்தி விளங்குகிறது.

    கும்பத்தில் தோன்றிய அகத்தியருக்கு ஈடு இணை யாருமில்லை பக்தியில்.

    எனவே அம்மையப்பன் தனது மைந்தன் அகத்தியனை அழைத்தான்.

    என் கண்ணே நீ தெற்கே நோக்கிச் செல்! அங்கே அறிவிற் சிறந்தோர் ஆயிரமாயிரம்! அங்கு சென்றால் உனக்கு அறிவு உலகத்தின் தலைமை பதவி கிடைக்கும் தித்திக்கும் செந்தமிழால் என்னை தினந்தோறும் பாடிடுவாய்.

    அப்பா தங்கள் திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்கில்லையா? சின்ன பிள்ளைதானே எல்லோர் வீட்டிலும் செல்லப்பிள்ளை! இந்த குள்ளப்பிள்ளையிடம் கண்ட குறை யாதோ? என்ற அகத்தியனுக்கு.

    குறையன்றுமில்லை கண்மணியே! உலகம் உன்னால் சமநிலை பெற வேண்டுமல்லவா? அதனால்தான் உன்னை அனுப்புகிறேன். என் திருமணக்கோலத்தைக் காணாமல் போகிறோமே என்று கலங்காதே! கோடானு கோடி மக்கள் காணப்போகும் அந்த அற்புதக் காட்சியை உனக்கு மட்டும் தனியாகக் காட்டுகிறேன். திருவேற்காட்டில் எனது திருமணக் காட்சியை தரிசிப்பாய் என ஆண்டவன் திருவாய் மலர்ந்தருளினான்.

    அந்த அகத்தியன் தென்னாடு வந்தான். தரிசனம் கண்டான். அந்த திவ்ய தரிசனம் அவனுக்கு மட்டுமல்ல. அன்று முதற்கொண்டு இன்று வரை திருவேற்காடு நோக்கி செல்லும் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    வேலவன் வேல் பெற்ற வரலாறு

    அவுணர்களை மாய்க்க அவதரித்த முருகன் நந்தினிப் பசுவின் பாலால் அபிஷேகம் செய்யப்பட்ட வரலாற்றைக் கண்டோமல்லவா? அந்தப் பாலே ஆறாக பாலி ஆறாகப் பாய்தோடியது அல்லவா? அந்த ஆற்றின் கரையில் அமைந்த திருத்தலம்தான் வேற்காடு என்றோமல்லவா?

    அதே திருத்தலத்தில் வேலவனுக்கு அன்னையின் அருளாசியும் கிடைத்தது.

    வேதபுரீசனாக அப்பன் வேற்காட்டில் அமர்ந்தான்.

    பாலாம்பிகையாக அன்னை அவனுடன் உறைந்தாள். தன்பிள்ளைமேல் கொள்ளைப் பிரியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் அவனும் தாய்க்கு மகன்தானே கொடிய சூரனை மாய்ப்பதற்குக் குழந்தை முருகனால் கூடுமோ?

    அன்னையின் பாசம் ஒருநிமிடம் அலைகழித்தது.

    கண்ணுதலான் இதனைக் கவனித்தான்

    அன்னைக்குக் குறிப்புணர்த்தினான்

    கண்ணுதலோன் கண்நோக்க வேற்கண்ணி களிப்புற்றுக் குதூகலித்து அன்பு கூர்ந்து

    மண்ணவரும் விண்ணவரும் வாழ்வுறவும்

    அவுணர்குலம் அறக்களைவாய் என்றுரைத்து

    எண்ணற்ற எழுபரிதிச் செழுஞ்சுடரின் ஒளிவிஞ்சச்

    சுடர்வேலைக் கரத்தெடுத்து

    கண்மணியாம் சேயவனின் கரமீந்து அருள்புரிந்தாள்

    கண்ணுதலோன் உவகையுற்றான்

    என்று தேவி கருமாரியம்மன் புராணம் செப்பும் வண்ணம் வேல் பெற்றான் குமரக்கடவுள். அந்த வேல்&கந்தவேல்-கருமாரி அன்னையின் திருக்கரத்தால் பெற்ற வேல்-திருவேற்காட்டில் வழங்கப்பட்ட வேல் ஆகும். வேல் ஈந்த பாலாம்பிகை அன்னை வேற்கண்ணி எனப் பெயர் பெற்றாள்.

    அந்த வேற்கண்ணியைத் தொழுது பணிந்து அங்கே வேலால் ஒரு தீர்த்தம் செய்தான் வேதவல்லி மகன். அத்தீர்த்தமே வேலாயுதத் தீர்த்தமாகும்.

    ×