செய்திகள்

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது

Published On 2019-02-06 06:51 GMT   |   Update On 2019-02-06 06:51 GMT
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்ற 3 பெண்களிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் லட்சுமி, வனிதா, கன்னியம்மாள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News