செய்திகள்
சோனியா காந்தியுடன் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி சந்திப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தியை பாராளுமன்ற விவகார துறை பிரகலாத் ஜோஷி சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாராளுமன்ற விவகார துறை மந்திரியாக பிரகலாத் ஜோஷி பதவி வகித்து வருகிறார்.
17-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் பாராளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி இன்று சந்தித்து பேசினார்.
வரும் பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.